டுபாயில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்ட இருவரில் ஒருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலன்னாவ சாலமுல்ல கமகேவத்த பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் என்பவர் ஆவார். மற்றைய சந்தேகநபரான பியல் புஷ்பகுமார ராஜபக்ஷ என்பவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. மாகந்துரே மதுஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட 23 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர். மாகந்துரே மதுஷை நாடு கடத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் இரண்டாம் திகதி மேற்கொள்ளப்படுமென டுபாய் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.