ராவணா வன் செய்மதியை புவி சுற்றுவட்டப்பாதையில் இணைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு பொறியியல் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளி மத்திய நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி முன்னெடுக்கப்பட்டதாக பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஆதர் சி கிளார்க் மத்திய நிலைய நிலையம் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டார். இலங்கை பொறியியல் மாணவர்கள் இருவர் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
அதற்கமைய அவர்கள் தயாரித்த சிறிய செய்மதி ஏவுகணை ஊடாக இன்று அதிகாலை 2.16 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஏவப்பட்டது.
ராவணா வன் செய்மதி ஒன்றரை நாட்கள் பயணத்தை மேற்கொண்டு அதன்பின்னர் 400 கிலோமீற்றர் சுற்று வட்டப்பாதையில் தனது செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளதாக பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் தயாரிக்கப்பட்ட மேலும் மூன்று செய்மதிகளை விண்ணுக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கான முன்னாயத்த பயிற்சியாக ராவண் வன் செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டதாக ச்சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/X5iF6_10w5A”]