எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தின் களனி ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் துங்கிந்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.