கெரீபியன் தீவிலுள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 65 வெனிசுல கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அதில் 5 பேர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கெரீபியன் தீவில் 159 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
வெனிசுல சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் இடைக்கிடையே பதிவாகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை அதிகாரிகளின் முறைகேடான செயற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படாமை ஆகியன சிறைக்கைதிகள் தப்பியோடுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக வெனிசுல செய்திகள் தெரிவிக்கின்றன.