சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பளை தீவு கடற்பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்றை சோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் இரண்டு ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது டிங்கு படகொன்று உள்ளிட்ட மேலும் பல மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.