மஹியங்கணை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மஹியங்கணை தேசிய பாடசாலைக்கு முன்னால் இன்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் ஸ்த்தலத்தில் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பஸ் வண்டியொன்றும் வேன் ஓன்றும் நேருக்கு நேர் மோதுண்ட போது விபத்த நிகழ்ந்துள்ளது.
வேனின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டு தவறான மருங்கில் பயணித்தபோது விபத்து நிகழ்ந்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர். திருகோணமலையிலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த பஸ் வண்டியுடன் எதிரே வந்த வேன் மோதியுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது வேனில் 12 பேர் பயணித்துள்ளனர். இவர்களுள் 10 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹியங்கணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுள் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கத்தைச் சேர்ந்த நால்வரும் டிச்பாரைச் சேர்ந்த நால்வரும் பனிச்சேரியைச் சேர்ந்த இருவரும் இவ்வாறு பலியாகினர்.
லிஷ்டர் அலக்ஷாண்டர் எனும் 32 நபரும் 27 வயதுடைய அவரது மனைவி நிஷாலின் எலக்ஷாண்டரும் உயிரிழந்தனர். அவர்களது 4 வயது இரட்டைக்குழந்தைகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பிரேம்ஸ் க்ன்றிக் எனும் 48 வயது நபரும் அவரது மனைவியும், புதல்வியும், புதல்வரும் உயிரிழந்துள்ளனர். அவரது மற்றொரு புதல்வி விபத்தில் காயமடைந்துள்ளார். 56 வயதுடை ஜோஷப் ரெலிண்டன் மற்றும் 50 வயதுடைய அவரது மனைவியும் விபத்தில் உயிரிழந்தனர். பஸ்ஸில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேநேரம் தம்புள்ளை கண்டலம வீதியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வேன்ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட பொழுது விபத்து நிகழ்ந்துள்ளது. வேனின் சாரதி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் விலச்சி பிரதான வீதியில் மதுருபிட்டிகம சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறு வீதியொன்றிலிருந்து கவனயீனமாக மோட்டார் சைக்கிளொன்றை பிரதான வீதிக்கு செலுத்திய போது அதில் பயணித்த சிறிய ரக லொறியொன்றில் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது. மோட்டார் சைக்கிளி;;ன் பின்புற ஆசனத்தில் சென்ற 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.