ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினால் கடத்திச் செல்லப்பட்ட நியுசிலாந்து நாட்டின் தாதியொருவர் உயிருடன் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. லுயிஷா அக்காபி எனப்படும் இந்த தாதி 2013 ஒக்டோபர் மாதம் கடத்தப்பட்டிருந்தார். அவரோடு மேலும் 7 பேர கடத்தப்பட்டிருந்தனர். அவர்களில் நால்வர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட ஏனைய இருவர்கள் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவலும் இல்லையென சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. லுயிஷா அக்காபி எனப்படும் இந்த தாதியை கண்டுபிடிக்க நியுசிலாந்தின் விசேட இராணுக்குழு சிரியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது