பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிராமங்கள் நோக்கிப் பயணிப்பவர்களின் வசதி கருதி பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் கொழும்பிலிருந்து வெளிப்பகுதிகள் நோக்கி பயணிக்கும் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட தனியார் பஸ்களின் எண்ணிக்கையை இன்று குறைக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.