இரண்டாம் கட்டமாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் விடுவித்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கராய்ச்சி சிறைச்சாலையிலிருந்த 100 இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டு லாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வாகா எல்லையிலுள்ள இந்திய அதிகாரிகளிடம் குறித்த மீனவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளாதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – பாகிஸ்தான் இடையில் பனிப்போர் நிலவிவரும் நிலையில் குறித்த நடவடிக்கை வரவேற்கதக்கதென சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த 7 ம் திகதி முதல் கட்டமாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.