மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் 50 மில்லிமீற்றர் தொடக்கம் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிமாக அதிகரிக்க கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் இடி மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.