நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதெனியவிலிருந்து கல்கமுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேனுடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர் தலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை பண்டாரகம –கெஸ்பாவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பாதையில் சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் கைதுசெய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.