வடக்கிற்கான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பெலியத்த வரை பயணித்த ரயில் அநுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் வைத்து தடம்புரண்டது.
இதன்காரணமாக ரயில்போக்குவரத்துக்களை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. ரயில் வீதியை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரயில் தடம்புரண்டமையினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.