அமெரிக்கா சரியான அணுகுமுறையை கையாளுமாயின் 3வது முறையாகவும் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் 3வது முறையாகவும் கலந்துரையாடல்களில் ஈடுபட வடகொரியா திட்டமிட்டுள்ளது.
கிம் ஜொங் உன்னின் விசேட அறிக்கையை வடகொரிய ஊடகம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் அந்நாட்டு தலைவர் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை இரு நாடுகளின் தலைவர்களுக்குமிடையில் முதலாவது சந்திப்பு கடந்த ஆண்டு சிங்கப்பூரிலும், 2வது சந்திப்பு வியட்நாமிலும் இவ்வருடம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.