மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை நாளை காலை 11.17 மணிக்கு இடம்பெறவுள்ளது.
குறித்த சுபவேளையின் போது மரக்கன்று ஒன்றை நாட்டுவதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டுமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.