இலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றுள்ள சந்தேகத்தில் இவர்கள் நால்வரும் அந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.