இந்திய பொதுத்தேர்தலில் வெற்றிப்பெறவேண்டிய வேட்பாளர் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்த்ர மோதி தேர்தலில் வெற்றிப்பெற்றால் சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமென இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கேஷ்மீர் பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் முறுகல்நிலை அதிகரித்துள்ளது. இருநாட்டு பாதுகாப்பு பிரிவுக்குமிடையில் அவ்வப்போது துப்பாக்கிச்சமரும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் கேஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே பொருத்தமானதென இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்த்ர மோதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியுமெனவும் பாகிஸ்தான் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் பொதுத்தேர்தல் நாளை ஆரம்பமாகி, எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மே மாதம் 23ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதனை தெரிவித்துள்ளார்.