இன்று இரவு முதல் மின்வெட்டு முற்றாக கைவிடப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினைக்கு மூன்று கட்டங்களின் கீழ் தீர்வினை பெற்று கொடுப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின்விநியோகத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் சடுதியாக குறைந்தமையினால் நீர் மின் உற்பத்தியில் கடும் தாக்கங்கள் ஏற்படடன. இதனால் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவையேற்பட்டது. இன்று இரவு முதல் மீண்டும் எவ்வித மின்வெட்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை ஒருபோதும் அதிகரிக்க போவதில்லை. குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதன் பயனை மக்களுக்கு வழங்குவதே நோக்கமாகும். விரைவில் இதனை நாங்கள் சாத்தியமாக்குவோம். இது ஒரு தேர்தல் வாக்குறுதியில்லை. அதனை வழங்க கூடிய நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இன்று மாலை முதல் மின்வெட்டை நாங்கள் முற்றாக நிறுத்துவோம். விரைவில் நாங்கள் 500 மெகா வோட் மின்சாரத்தை எமது மின்சார கட்டமைப்பில் இணைத்துக்கொள்வோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.