இன்று முதல் காலநிலையில் மாற்றங்களை எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக கனமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
இதன்போது தற்காலிகமாக காற்றும் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களத்தில் கடமையிலிருந்த வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.