கொஸ்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள் சிறைக்கூடத்திலிருந்து தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பதவி விலக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளே கடமையில் இருந்துள்ளனர்.