இஸ்லாமிய இராணுவ படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால், தாங்களும் அமெரிக்க இராணுவத்தை, பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போமென ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அரசு ரகசியமான முறையில் அணு ஆலைகளை அமைத்துவருவதாக அமெரிக்கா குற்றம்சுமத்தியுள்ளது.
இதனையடுத்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவ படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.