இலங்கை ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக பெலிஅத்த ரயில் வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது. தெற்குக்கு புதிய பாதையெனும் தொனிப்பொருளில் தேசிய வைபவம் இடம்பெற்றது.
இன்று காலை 9 மணிக்கும் இடம்பெறும் சுபேநேரத்தில் ரயில் வீதியில் கன்னி பயணம் ஆரம்பமாகியது. மாத்தறை-பெலிஅத்த ரயில் வீதியில் பெலிஅத்த ரயில் நிலையத்தில் இருந்து ஏழு ரயில் வண்டிகள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.
ஒரு ரயில் வண்டி காலி வரையும் மற்றைய நான்கு ரயில்களும் மருதானை வரையும் பயணத்தை தொடரவுள்ளன. ஏனைய 2 ரயில் வண்டிகளும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனயா வரை பயணிக்கவுள்ளன. பெலிஅத ரயில் நிலையத்தில் இருந்து ஆறு ரயில் வண்டிகள் பயணத்தை நிறைவு செய்யும்.
இதில் ஐந்து ரயில் வண்டிகள் மருதானை வரை பயணிக்கும் ஒரு ரயில் வண்டி வவுனியா வரை பயணிக்கவுள்ளது. இலங்கையின் மிக நீளமான ரயில் பாலமான வட்டகம பாலத்தினை மாத்தறை பெலிஅத்த ரயில் வீதியில் கண்டுக்கொள்ள முடியும். இதன் நீளம் 1500 மீட்டர் ஆகும். அத்துடன் 2வது நீளமான ரயில் பாலமும் இதே பாதையில் அமைந்துள்ளது.
நில்வளா கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நீளம் 1400 மீட்டர் ஆகும். நிலத்தில் இருந்து அதிகூடிய உயரத்தில் அமைந்துள்ள ரயில் பாலமும் இதே வீதியின் வெஹரகொட பகுதியில் காணப்படுகின்றது. இது 61 அடி உயரத்தை கொண்டதாகும்.
இலங்கையில் அதி நீளமான சுரங்க பாதையும் கெக்குனதுர ரயில் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இது 2017 அடி நீளமானதாகும். அத்துடன் இலங்கையின் மிக நீளமான ரயில்வே மேடையும் பெலிஅத்த ரயில் நிலையத்தின் மேடையாகும். இவ்வனைத்துடன் ரயில்வே வரலாற்றில் புதிய அத்தியாயமாக மாத்தறை-பெலிஅத்த ரயில் வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது.