மாகந்துரே மதூசுடன் கைதான ரயன் வேன்ரொயன் உள்ளிட்ட ஐவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை UL 226 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கைதான அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை
ஏற்கனவே டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 8 பேரிடம் பாதுகாப்பு பிரிவு தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சிப்பானை இம்ரானை 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்தின் ஊடாக பொலிசாருக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.