வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோவுக்கு எதிரான நீதிமன்ற செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி நிக்கலொஸ் மடுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கியமை, அவற்றுக்காக வெளிநாட்டு நிதியுதவிகளை பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சி தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.