மின்சார சபைக்கு நிவாரண விலையில் எரிபொருளை வழங்கவுள்ளதாக அமைச்சர் ஹபீர் காசிம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழு முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். ஜெனரேட்டர்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளை குறைந்த விலைக்கு விற்பனை செய்யுமாறு கனியவள கூட்டுத்தாபனத்தினால் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டது.
இதனால் குறித்த எரிபொருளை மின்சார சபைக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கு தமது அமைச்சு தீர்மானம் கொண்டதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 3 தனியார் நிறுவனங்களிடமிருந்து 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடாக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொள்வனவு செய்யப்படும் 100 மெகாவோட் மின்சாரத்திற்கு அமைய புதிய மின் விநியோகத்துடன் மின் வெட்டு தொடர்பில் துரித தீர்வு எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடாக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.