ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 60 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதில் 37.5 மில்லியன் ரூபா நிவாரண கடனாக வழங்கப்படும். 12.5 மில்லியன் ரூபா கொடுப்பனவாகவும் மிகுதியுள்ள 10 மில்லியன் ரூபா அரச அனுமதியின் கீழும் வழங்கப்படவுள்ளது.
2023 ம் ஆண்டளவில் திட்டம் முன்னெடுக்கப்படும் மத்திய , வடமத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.