யாழ்ப்பாணம் – மீசாலை புத்தூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிடுகு ஏற்றிவந்த லேண்ட் மாஸ்டருடன் பின்னால் வந்த லொறிமோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் விசுவமடுவைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதி சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப்பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.