இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 799 கிலோ கிராம் போதைப்பொருளை அழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த போதைப்பொருள் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியானவை என போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளம் சமந்த குமார கித்தலவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுற்ற போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்படவுள்ளன. இதில் ஊடகவியலாளர்கள், நீதவான்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.