இன்று காலை 9 மணி முதல் 24 மணி நேர நீர்வெட்டு கொழும்பின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியவசிய நடவடிக்கை காரணமாகவே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை,மஹரகம, தெஹிவளை-கல்கிசை, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர அதிகார பகுதிகளிலும் மற்றும் கடுவலை மாநகர சபை அதிகார பகுதிகளிலும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு இரத்மலானை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளிலும்,கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா அதிகார சபை பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.