மோட்டார் வாகன விபத்தில் 3 இளைஞர்கள் பலியான சம்பவமொன்று நேற்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் சிக்கிய மோட்டார் வாகனமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
3 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.அவலர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.21 22 26 வயதுடைய இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரில் காத்தான்குடியை சேர்ந்த அதீப் எனும் இளைஞரும் உயிரிழந்துள்ளார்.
இந்த கோர விபத்து அந்த பகுதி மக்களிடையே ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.