தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு சமயங்களுக்கு இடையில் சக வாழ்வை நோக்கிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் வட மாகாணத்தின் பௌத்த மாநாடு நேற்று ஆரம்பமாகியது
வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு வவுனியா ஸ்ரீ போதி தக்ஷிண ராம விகாரையில் பௌத்த விகாரையில் மாநாடு ஆரம்பமாகியது. பௌத்த இந்து இஸ்லாம் ஆகிய சமய தலைவர்களின் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியது.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். சமய சகா வாழ்வை மேம்படுத்த தேசிய மற்றும் சமய ரீதியில் காணப்படுகின்ற மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய தீர்வுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடபட்டது.