பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடைய அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொஸ்கமவில் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிசார் தொடர்பில் மக்களிடையே நிலவும் எதிர்மறையான எண்ணங்களை மாற்றுவதே இதன் நோக்கமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போதய அரசாங்கத்தினால் பொலிஸ் திணைக்களத்தின் தரத்தினை உயர்த்துவதற்கு பல உள்ளார்ந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக மட்டுமன்றி சுற்றாடலை பாதுகாப்பதற்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளை வழங்குவதிலும் பொலிசார் நிறைவேற்றும் பணிகளை ஜனாதிபதி பாரட்டியுள்ளார்.