அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இரு தலைவர்களும் அடுத்த மாதம் வொஷிங்டனில் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பில் அமெரிக்க – தென்கொரிய கூட்டணியை வலுப்படுத்தல், அணுவாயுத பாவனையை முற்றாக ஒழித்தல், கொரிய தீபகற்பத்தில் சமாதான ஆட்சியை ஸ்த்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை அண்மையில் வடகொரிய தலைவருடனான அமெரிக்க ஜனாபதிபதியின் சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.