சவுதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதி தடையை ஜேர்மன் நீடித்துள்ளது. மேலும் 6 மாத காலத்திற்கு தடை நீடிக்கப்படுவதாக ஜேர்மன் சான்ஸலர் எஞ்சலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டதையடுத்து ஜேர்மன் சவுதி அரேபியாவுக்கான ஆயுத ஏற்றுமதி தடையை விதித்தது.
தடையை நீக்குமாறு பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன. எனினும் தடை தொடரப்படவேண்டுமென மனித உரிமை அமைப்பின் நிலைபாடாகும். இதனால் சவுதி அரேபியாவுக்கான ஆயுத ஏற்றுமதி தடையை நீடித்துள்ளதாக ஜேர்மன் சான்ஸல் எஞ்சலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.