வடக்கில் தொடர்ந்தும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இராணுவமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பூரண பங்களிப்பை வழங்கி வருகின்றன.
கண்ணி வெடி அகற்றும் தேசிய திட்டம் விரைவில் நிறைவடையவுள்ளது. தேசிய கொள்கை வகுப்பு, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர் நிர்மாணம், வட மாகாண அபிவிருத்தி, கண்ணி வெடி அகற்றும் அமைப்புக்கள் ஆகியன இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றன. 20ம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டுமென்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைந்து வடபகுதி இளைஞர் யுவதிகள் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு பொருளாதார ரீதியான நன்மைகள் கிடைத்து வருவதாக அவ்விளைஞர் யுவதிகள் தெரிவிக்கின்றனர்.