சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென பொலிஸ் பிரிவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இதற்கான வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுற்றுலா பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென சுற்றுலா அமைச்சு குறிப்பிட்டுள்ளது.