எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் காணமல்போனோர் தொடர்பான அலுவலகங்களை துரிதமாக ஸ்த்தாபிக்க இருப்பதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களில் காணமல்போனோர் விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இவ்வலுகங்கள் ஸ்த்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வடமாகாண ஆளுநரின் இணைப்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.