நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக போதுமான மின் விநியோகத்தை வழங்க முடியாமையே இதற்கு காரணமாகும். ‘
இதற்கமைய காலை 08.30 மணியிலிருந்து, முற்பகல் 11.30 மணிவரையும், முற்பகல் 11.30 மணிமுதல், 02.30 மணிவரையும் மின்வெட்டு கட்டம் கட்டமாக அமுல்ப்படுத்தப்படும். அத்துடன் பிற்பகல் 02.30 மணியிலிருந்து, 05.30 மணிவரையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென மின்சார சபை அறிவித்துள்ளது.
மூன்று மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை வேளையிலும் கட்டம் கட்டமாக மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படும். மாலை 06.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கு மின்துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படுமென மின்சார சபையின் பொது முகாமையாளர் என்.டி.டப்ளியூ.குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.