வவுனியா நெடுங்கேணியில் பண்டைய கால புத்தர் சிலை மற்றும் தொல்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நெடுங்கேணி மருதோடை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வர் நேற்று கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நான்கு நபர்கள் காஞ்சிரமோட்டை காட்டுப்பகுதியில் பேக்கோ மூலம் புதையல் தோண்டி பண்டைய புத்தர் சிலைஇ கலசம் விளக்கு போன்ற பல பொருட்களை எடுத்துள்ளனர். இவ்வாறு தோன்டி எடுக்கப்பட்ட பெருட்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் குறித்த நான்கு நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் தொல் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.