மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதனால் 07 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை மீதப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதாகவும் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.