நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன்ட் பீட்டர்ஸ் துருக்கிக்கு பயணித்துள்ளார். இஸ்தான்புல் நகரில் இடம்பெறும் முஸ்லிம் சமய மாநாட்டில் பங்கேற்பதற்கென அவர் அங்கு பயணித்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறைவேற்று குழு மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 57 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கிறிஸ்சேர்ச் பகுதியிலுள்ள இரு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பில் மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை துருக்கி ஜனாதிபதி ரிஷப் தைப் எட்டோகன் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.