இந்திய லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். எதிர்வரும் 15ம் திகதி இந்திய லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகததில் இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ளது. லோக் சபா தேர்தலிலும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகின்றது. கமலஹாசனினால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கு 98 வீதமானோர் புத்திஜீவிகள். பேராசிரியர்கள், டொக்டர்கள், பொறியியலாளர்கள், முன்னாள் ஐபீஎஸ் அதிகாரிகள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.