போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சம்பவம் கிரிபத்கொட – திப்பிட்டியகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 32 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களும் ஏழு 500 ரூபா போலி நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.