முதலீட்டாளர்குளுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற விசேட மாநாட்டொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இம்மாநாட்டில் ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பிரதமர் பதில் அளித்தார்.
நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமானால் முதலீட்டாளர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. முதலீட்டாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது. இதற்காக குறுகியகால நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் எப்பொழுதும் தயாராகவுள்ளது என தெரிவித்தார்.