இலங்கை அரசாங்கம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நம்பிக்கை கொண்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக மேலும் இரு வருடங்கள் வழங்கப்பட்டுள்ளன. சரியான தகவல்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கியதன் மூலம் கால அவகாசத்தை பெறமுடிந்தது. சவால்கள் காணப்பட்ட போதிலும் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.