மாலி இராச்சியத்தில் இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவம் மாலியின் மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாலி இராச்சியத்ததை இஸ்லாமிய சட்டத்திற்கு அமைவாக ஆட்சியை நடத்த வேண்டுமென வன்முறையில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மாலியில் பல்வேறு பகுதிகளில் குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.