ஸ்பெய்ன் தலைநகர் மெட்ரிட்டில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கெட்லோனியா சுதந்திரத்தை ஆதரிப்பவர்களே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 12 பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டுள்ளதாக ஸ்பெய்ன் தகவல்கள் தெரிவிக்கின்றன.