இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா வெள்ளையடிப்பு செய்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வர்த் லூயிஸ் அடிப்படையில் 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதற்கமைய 5-0 என தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. கேப்டவுனின் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது. குசல் மென்டிஸ் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் காசிசோ ரபாடா 3 விக்கெட்டுக்களையும், அன்ரிச் நோர்ஜ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 226 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடிய போது போதிய வெளிச்சமின்மை காரணமாக டக்வர்த் லூயிஸ் முறை அடிப்படையில் 28 ஓவர்களுக்கு 95 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறித்த இலக்கை 28 ஓவர்களில் நிறைவுசெய்த தென்னாபிரிக்க அணி போட்டியில் வெற்றிபெற்றது. இதேவேளை இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளை கொண்ட டுவெண்டி – 20 தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.