நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த 200 வீதி அபிவிருத்தி திட்டங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. ‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ எனும் எண்ணக்கருவின் கீழ் குறித்த வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வாக நீர்கொழும்பு, கொச்சிக்கடை புதிய பாலம் மக்களிடம் வழங்கப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாவனெல்ல ஹெம்மாத்தகம கம்பொல வீதி, மாவனெல்ல அரநாயக்க வீதி, மாவனெல்ல ரம்புக்கனை மற்றும் கம்பஹா புத்தளம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார். இதேவேளை நாடு முழுவதும் வீதிகளை அபிவிருத்திக்கு உட்படுத்தி புதிய போக்குவரத்து கட்டமைப்பொன்றை உருவாக்குவதே பிரதான நோக்கமென அமைச்சர் தெரிவித்தார்.