அமெரிக்காவின் மாபியா குழுவொன்றின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கேம்பினோ எனப்படும்மாபியா குழுவின் தலைவராக செயற்பட்ட ப்ரான்சிஸ்கோ கேலி கொலை செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நபர் இத்தாலியிலும் மாபியா குழுவொன்றை வழிநடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.