ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகளை இலக்காக வைத்து விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பலியானதாக ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலின்போது மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் தொடருமென ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.